செய்திகள்

ஒளிமயமான எதிர்காலத்திற்கு அமைச்சரின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும்! முன்னாள் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர்.

Posted in 1 by ustamil on ஏப்ரல் 5, 2010

தனது நிறுவனத்தின் ஊழியர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்காத யாழ் பத்திரிகை நிறுவன உரிமையாளர் ஒருவர் தன்னைப் பற்றி தம்பட்ட மடித்துக் கொண்டு உங்கள் உரிமைக்கு உழைத்தவர் என்று தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டிருப்பது வேடிக்கையான விடயமென யாழ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவர் பிரசன்னா யாழ் கொக்குவில் மேற்கு சிறிஞான பண்டிதர் வித்தியாசாலையின் கணினி கூடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலட தெரிவித்தார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மேற்படி கணினிக் கூடத்தைத் திறந்து வைத்ததுடன் இரு கணிகளை உடனடியாக வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இங்கு உரை நிகழ்த்திய யாழ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ் குடாநாட்டை அபிவிருத்தியின்பால் இட்டுச் செல்கின்றார் என்றும் குடாநாட்டின் கல்வி அபிவிருத்தியும் இதனுள் அடங்கும் முக்கிய அம்சமாகும் என்றும் எனவே அமைச்சர் அவர்களது கரங்களைப் பலப்படுத்துவதன் ஊடாகவே எமது மக்களினதும் குடாநாட்டினதும் ஒளிமயமான எதிர்காலத்தை அடைய முடியுமென்றும் குறிப்பிட்டார்.

மேற்படி நிகழ்வில் உரை நிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எமது மக்களின் நலன்சார்ந்த திட்டங்களை நாம் படிப்படியாக மேற்கொண்டு வரும் நிலையில், சில சமூக விரோத சக்திகள் எம்மீது சேறு பூசும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இவ்வாறான சக்திகளுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் எமது மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்தார்.

பின்னூட்டமொன்றை இடுக