கிளிநொச்சியில் ஆணின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு
கிளிநொச்சி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கனகபுரம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் நிமலன் (வயது 50) என்பவரது சடலம் என தெரிவிக்கப்படுகின்றது.
தனிமையிலிருந்த போது காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டிலிருக்கும் சகோதரங்களுக்கு தெரியப்படுத்தியிருந்ததாகவும், குறிப்பிட்ட நபரின் மகன் கல்வி காரணமாக விசுவமடு பகுதியில் உறவினர்களுடன் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபரின் வீடு 5 ஏக்கர் நிலப் பகுதியில் அமைந்துள்ளதாகவும், வீட்டு வளாகத்திற்குள் அமைந்துள்ள கிணற்றில் இறந்த நிலையில் சடலத்தை கடந்த ஒருவாரத்தின் பின்னர் அழுகிய நிலையில் கண்டெடுத்தள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
leave a comment