பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்ன நாட்டுக்குள்ளேய தங்கியுள்ளதாகத் தகவல்.
முன்னாள் இராணுவத் தளபதியும் படைகளின் பிரதானியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்ன இலங்கையிலேயே தலைமறைவாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தகவலை பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி வெளியிட்டுள்ளார். தனுன நாட்டைவிட்டு வெளியேற்ியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்க குறித்துக் கேட்கப்பட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தனுன திலகரட்னவை கைதுசெய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் நாட்டை விட்டு வெளியேற முடியாத வகையில் அவரது கடவுச்சீட்டு தடைசெய்யப்பட்டுள்ளது.
பொன்சேகாவுடன் இணைந்து தனுன ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இவருக்கெதிராக கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி கொழும்பு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்தது.
அநுராதபுரம், கொழும்பு, எம்பிலிப்பிட்டி ஆகிய பகுதிகளிலுள்ள இரவுநேர விடுதிகளில் தனுன தங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள. வெளிநாட்டு வங்கிகளில் தனுன திலகரட்ன வைத்திருக்கும் கணக்கு விபரங்களை பெற்றுகொள்வதற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியை குற்றப் புலனாய்வுத் நாட்டுக்குள்ளேயே தங்கிளிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கறது.
leave a comment