செய்திகள்

மட்டு. மாவட்ட செயலகத்தில் மீள்குடியேற்றப் பிரதிஅமைச்சர் தலைமையில் மீள் குடியேற்றம் குறித்த கலந்துரையாடல்

Posted in எங்கள் தமிழ் by ustamil on மே 11, 2010

மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்டமீள் குடியேற்றம் குறித்த கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இதில் மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பில் முக்கியமாக ஆராயப்பட்டுள்ளது. அத்துடன் இந்தக் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதாக தெரிகிறது.

மீள்குடியேற்றப்பட்ட மக்களின் குடியிருப்புகள், அப்பகுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகள், வீதி அபிவிருத்தி, மின்சார வசதி, சுகாதாரம், கல்வி போன்றவற்றை மேம்படுத்துவது தொடர்பாக இந்தக் கலந்துரையாடலின்போது ஆராயப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் அருமைநாயகம:, மேலதிக அரச அதிபர், திணைக்களத் தலைவர்கள் உட்படப் பலரும்  கலந்துகொண்டனர்.

பின்னூட்டமொன்றை இடுக