செய்திகள்

அரசியல் தீர்வு குறித்து ஜூன் மாதத்தில் இந்தியா – இலங்கை பேச்சுவார்த்தை

Posted in எங்கள் தமிழ் by ustamil on மே 24, 2010

அரசியல் தீர்வு குறித்து ஜூன் மாதத்தில் இந்தியா – இலங்கை பேச்சுவார்த்தையில் ஈடபட வுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த முதலாவது அரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தை புதுடெல்லியில் நடைபெறவுள்ளது.

இந்தப்பேச்சுவார்த்தையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதீபா பட்டீல், மற்றும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

யப் பிரதமர் மன்மோகன் சிங் அரசியல் தீர்வுகள் குறித்து பேசுவதற்கு விடுத்த அழைப்பிற்கமையவே மஹிந்த ராஜபக்ச இதில் கலந்து கொள்கிறார் எனத் தெரிகிறது.

மாகாண சபையின் அதிகாரங்கள், 13ஆவது அரசியல் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதில் கலந்துரையாடப்படவுள்ளதாக அறியமுடிகிறது.

பின்னூட்டமொன்றை இடுக