செய்திகள்

பாதிக்கப்பட்டவர்ளை ஆபாசத்திற்கு தூண்டும் படையினர், மீளக்குடியமந்தோர் அச்சம்

Posted in எங்கள் தமிழ் by ustamil on ஓகஸ்ட் 23, 2010
பாலியல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு படையினர் மீளக்குடியமர்ந்த மக்களை தொடர்ந்தும் தூண்டிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (ஆகஸ்ட் 22) மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பாக குறிப்பிட்ட பகுதி இராணுவ உயரதிகாரியிடம் பொதுமக்கள் முறைப்பாடு செய்திருந்த போதும் அதற்கு எதுவிதமான நடவடிக்கையும் எடுக்ப்படிவில்லை என தெரிவிக்ப்படுகின்றது.
மாந்தைப்பகுதியில் மீளக் குடியமர்ந்துள்ளவர்களிடம் இரவு வேளையில் சென்ற இராணுவத்தினர் பாலியல் நடவடிக்கைக்கு ஒத்துழைக்குமாறு பெண்களை கேட்டதாகவும் இதற்கு மறுப்பு தெரிவித்தபோது பணத்தை காண்பித்து தொடர்ந்தும் வற்புறுத்தியதாகவும் தொரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் தொடர்பாகவே முறையிடப்பட்ட போதும் எதுவித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு பாதுகாப்பற் சூழலில் எவ்வாறு வாழமுடியும் ? என மக்கள் அஞ்சுகின்றனர்.

பின்னூட்டமொன்றை இடுக