பார்வதி அம்மாள தமிழகத்தில் வைத்திய சிகிச்சைக்கு வரலாம் – கருணாநிதி
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இன்றைய தினம் நாடு திரும்பியுள்ள நிலையில் அவர் தமிழகத்தில் தங்கிச் சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதென தமிழக முதல்வர் கருணாநிதி தமிழக சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார். இத் தகவலை பி பி சி உலகசேவை வெளியிட்டுள்ளது.
தான புதுடில்லி சென்றபோது பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடமும் பார்வதி அம்மாள் இங்கு வர அனுமதிக்கவேண்டும் என வற்புறுத்தியதாகவும், அதன் பின்னர் இப்போது பார்வதி அம்மாளை அனுமதிக்கலாம் என மலேசியாவிலுள்ள இந்தியத் தூதரகத்திற்கும் தமிழக அரசுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பியிருப்பதாகவும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற தமிழக அரசு அதற்குத் தேவையான உதவிகளை எல்லாம் செய்யும் ஆனால் அவர் எந்த அரசியல் கட்சியினரோடோ, குறிப்பாகத் தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்களுடனோ எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாதென்றும் மத்திய அரசின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக முதலமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
அரசினால் பெயர் குறிப்பிடப்பட்ட அவருடைய உறவினர்களோடு மட்டுமே தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
leave a comment