செய்திகள்

யாழ் நகரில் விசேட பொலிஸ் பாதுகாப்புத் திட்டம் அமுல்

Posted in எங்கள் தமிழ் by ustamil on மே 11, 2010

கடத்தல் மற்றும் வன்முறைகள் அதிகரித்துள்ளமையினால் யாழ் நகர வீதிகளில் விசேட பொலிஸ் பாதுகாப்புத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக வர்த்தக நிலையங்கள் , நிதி நிறுவனங்கள், பாடசாலைகள் அமைந்துள்ள பிரதேசங்களில் நடமாடும் ரோந்துச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என வடபிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமால் லியுவ்கே தெரிவித்துள்ளார்.

தவிர சாவகச்சேரி, சுன்னாகம், மானிப்பாய், தெல்லிப்பளை, நெல்லியடி, கிளிநொச்சி  ஆகிய நகரங்களிலும் நடமாடும் பொலிஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாதுகாப்புத் திட்டத்தைக் கண்காணிக்வென விசேடமாக பொலிஸ் அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் வடபிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

பின்னூட்டமொன்றை இடுக