செய்திகள்

கரடியனாறு குண்டு வெடிப்பில் 62 பேர் பலி

Posted in எங்கள் தமிழ் by ustamil on செப்ரெம்பர் 17, 2010
மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இடம் பெற்ற குண்டு வெடிப்பில் சுமார் 60 பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளுர் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்ககை பாதுகாப்பு அமைச்சு சுமார் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மூன்று லொறிகளில் வைக்கப்பட்டிருந்த டைனமற் வெடித்தாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான காணொளிகளும், படங்களையும் பார்வையிடுக.

(காணொளிகளை பார்வையிட படங்களை அழுத்தவும்)

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இடம் பெற்ற குண்டு வெடிப்பு

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இடம் பெற்ற குண்டு வெடிப்பு



இந்.இராணுவத் தளபதியுடன் இந்.பாதுகாப்புத்துறையும் இரகசிய விஜயம். கே.பி மீதான விசாரனை ஆரம்பம்

Posted in எங்கள் தமிழ் by ustamil on செப்ரெம்பர் 11, 2010
விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுத விநியோகஸ்தரும், சர்வதேச பொறுப்பாளரும், தற்போது ஸ்ரீலங்கா அரசின் கட்டுப்பாட்டில் இருப்பவருமான கே.பி. எனப்படும் செல்வராஜா பத்மநாதன் இந்திய அதிகாரிகளால் கொழும்பில் விசாரிக்கப்பட்டு வருவதாக பத்திரிகையாளர் வித்தியாதரன் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன் கிழமை 8ம் திகதி கொழும்ப விரைந்த இந்திய அதிகாரிகள் விசாரனையை ஆரம்பித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவித்துள்ளதாகவும், குறிக்கப்பட்ட இந்திய உயர் அதிகாரிகள் வருகை தந்திருந்ததை தான் நேரடியாக அறிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் சனிக்கிழமை இடம் பெற்ற உலக தமிழ் பண்பாட்டியக்கம் நடாத்திய “அகம் புலம் தமிழர் வாழ்வியல்” மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகையில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தான் ஜேர்மனிக்கு புறப்படுகையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய இராணுவத்தளபதிக்கு வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றதை அவதானித்ததாகவும், இதே வேளை பிற இந்திய உயரதிகாரிகள் அன்று வருகை தந்திருந்ததை அவதானித்ததாகவும் கூறினார்.
இவர்களின் வருகை தொடர்பாக தனக்கு கிடைத்த தனிப்பட்ட தகவலின் படி செல்வராஜா பத்மநாதனை விசாரனை செய்யவுள்ளதாகவும்;, இவ் விசாரனைகள் கடந்த புதன் கிழமை முதல் ஆரம்பித்துள்ளதை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் விஜய் குமார் சிங்கின் 5 நாள் விஜயம் தொடர்பாக ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்த போதும், ஏனைய இந்திய பாதுகாப்புத்துறை உயரதிகாரிகளின் வருகை தொடர்பாக இரகசியம் பேணப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அபிவிருத்தி தொடர்பான கருத்து கூறுவதற்கும் தடை, சிறுப்புரிமை பறிக்கப்படுகின்றது-சிவசக்தி விசனம்

Posted in எங்கள் தமிழ் by ustamil on செப்ரெம்பர் 2, 2010
வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பில்லை
02.09.2010 வியாழக்கிழமை அன்று வன்னி மாவட்டத்தின் ஓமந்தை, சேமமடு ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் நடமாடும் சேவையைப் பார்வையிடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இவ்வாறே முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற அபிவிருத்திக் கூட்டங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
வாக்களித்த மக்களின் அபிவிருத்தி தொடர்பாக தமது கருத்துக்களை எடுத்துரைப்பதற்குக்கூட சந்தர்ப்பம் மறுக்கப்படுவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மறுக்கப்படுவதையே மேற்படி சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஓமந்தை, சேமமடு மக்கள் கடந்த 15ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெயர்ந்து இப்பொழதுதான் தமது கிராமங்களில் குடியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது விடயத்தில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும். நடமாடும் சேவையின்பொழுது நான் இவைகளை நேரில் சென்று உரிய அதிகாரிகளிடம் விளக்கி அம்மகளுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்ளலாம் என்றிருந்த வேளையில் எம்மை அழைக்காதது எமக்கு வருத்தமளிப்பதுடன், எமது உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன் என்று தனது ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் சிவசக்தி ஆனந்தன் வெளியிட்டுள்ளார்.

நடமாடும் பதிவுசேவையில் கலந்துகொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின்வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பில்லை02.09.2010 வியாழக்கிழமை அன்று வன்னி மாவட்டத்தின் ஓமந்தை, சேமமடு ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் நடமாடும் சேவையைப் பார்வையிடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இவ்வாறே முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற அபிவிருத்திக் கூட்டங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.வாக்களித்த மக்களின் அபிவிருத்தி தொடர்பாக தமது கருத்துக்களை எடுத்துரைப்பதற்குக்கூட சந்தர்ப்பம் மறுக்கப்படுவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மறுக்கப்படுவதையே மேற்படி சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.ஓமந்தை, சேமமடு மக்கள் கடந்த 15ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெயர்ந்து இப்பொழுது தான் தமது கிராமங்களில் குடியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது விடயத்தில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும். நடமாடும் சேவையின்பொழுது நான் இவைகளை நேரில் சென்று உரிய அதிகாரிகளிடம் விளக்கி அம்மகளுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்ளலாம் என்றிருந்த வேளையில் எம்மை அழைக்காதது எமக்கு வருத்தமளிப்பதுடன், எமது உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன் என்று தனது ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் சிவசக்தி ஆனந்தன் வெளியிட்டுள்ளார்.